ETV Bharat / state

வளசரவாக்கம் to ஆற்காடு சாலை பணி எப்போது முடியும்? - சென்னை மெட்ரோவின் பதில்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 9:19 PM IST

Chennai Metro: ரூ.63,000 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு நடக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு வார காலத்தில் இப்பணிகள் முடிக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: போரூர், வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் முடிக்கப்பட உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (அ க்.3) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,000 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை, மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தனியார் ஒப்பந்ததாரரான நிறுவனத்தின் மூலம் சாலை சீர்செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், அவ்வப்போது பெய்து வரும் மழையாலும், மற்றும் பிற துறைகளின் பணிகள் சாலை ஓரம் நடைபெறுவதாலும் சாலை சேதமடைந்துள்ளது. சாக்கடை நீரை சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்களும் இணைந்து செயல்ப்பட்டு வருகிறது.

மேலும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில், சாலை சீரைமப்புப் பணிகைளயும்; மெட்ரோ ரயில் தூண் பணிகள் முடிவைடந்த இடங்களில் தடுப்புகளை மாற்றி அமைக்கும் பணிகைளயும் ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளது' என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எதிர்பாலினத்தவரிடம் பேச தயக்கமா? ஆரோக்கிமான உரையாடலுக்கு இதுதான் வழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.