ETV Bharat / state

இரவு ரோந்துப் பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!

author img

By

Published : May 28, 2019, 6:45 PM IST

சென்னை: இரவு நேர ரோந்துப் பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்திய காவலர்களை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

akv

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் ராமு, ஆயுதப்படை சக்திவேல், ஊர்காவல்படை அண்ணாதுரை ஆகியோர் நேற்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நள்ளிரவு 2.30 மணியளவில், ஒரு பகுதியில் மூன்று முறை சுற்றி சுற்றி வந்த நபர் மீது சந்தேகமடைந்த அவர்கள், அவரிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றுள்ளனர்.

ஆனால், இவர்களைப் பார்த்தவுடன் அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர், காவலர்கள் தங்களின் வாகனத்தில் பின் தொடர்ந்ததையடுத்து, கையில் இருந்த மூன்று பைகளை கீழே போட்டுவிட்டு அவர் தப்பியுள்ளார். காவலர்கள் அதனை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் பணம் இருந்துள்ளது.

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!

இந்நிலையில், இரவு நேர ரோந்துப் பணியில் விழிப்புடன் செயல்பட்டு பெரும் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்தியுள்ள காவலர்களை இன்று நேரில் அழைத்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் வெகுமதி வழங்கியும் ஊக்குவித்தார்.

கோட்டூர்புரத்தில் மர்ம நபர்கள் வீசி சென்ற 1.56 கோடி பணத்தை கைப்பற்றிய காவலர்களை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.


சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் உதவி ஆய்வாளர் ராமு,ஆயுதப்படை சக்திவேல்,ஊர்காவல் படை அண்ணாதுரை  வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அந்த இடத்தில் சுற்றிச் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாக அந்த நபர் போலீசாரின் கண்களில் பட்டதையடுத்து விசாரணை செய்வதற்காக அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் நிற்காமல் வேகமாகச் சென்றதால் சந்தேகம் வலுத்ததையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர்.

போலீசார் தன்னை விடாமல் துரத்தியதை அடுத்து அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் இருந்த 3 பைகளை. வீசியெறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துரத்துவதை நிறுத்திவிட்டு ரோந்துவாகனத்தை விட்டுக் கீழிறங்கி பைகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

ஆனால் அதற்குள் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வேகமாகச் சென்று தலைமறைவானதையடுத்து அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு பணத்தை மீட்ட காவலர்களுக்கு காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.