ETV Bharat / state

ஆட்டோவில் தூங்கிய பெண் பலி.. கல்லூரி மாணவனிடம் கத்தி முனையில் வழிப்பறி.. சென்னையில் நிகழ்ந்த குற்றச் செய்திகள்!

author img

By

Published : Jun 8, 2023, 12:02 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் கோயிலுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் தூங்கியபடி பயணம் செய்த பெண் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை: மேற்கு மாம்பலம் சத்தியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). இவர் வந்தவாசி அருகே உள்ள மேல்மலையனூர் கோயிலுக்கு தரிசனத்திற்காக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் ஆட்டோவில் கோயிலுக்கு சென்று வர திட்டமிட்ட ரம்யா, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தங்கைகள் இருவரை அழைத்துக்கொண்டு நேற்று அதிகாலை கோயிலுக்கு புரப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு மனநிறைவுடன் சென்னைக்கு திரும்பியுள்ளனர். குழந்தைகள் மற்றும் தங்கைகளை ஆட்டோவின் உள்ளே அமரவைத்து விட்டு ஓரமாக அமர்ந்திருந்த ரம்யா, அதிகாலை எழுந்த தூக்க கலக்கத்தில் கண் அசந்து தூங்கியுள்ளார். இந்நிலையில் அந்த ஆட்டோ சென்னை விமான நிலையம் அருகே சென்றபோது நிலை தடுமாறிய ரம்யா தூங்கிக்கோண்டே ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்துள்ளார்.

ஆட்டோவின் பின் சக்கரம் ரம்யாவின் கால் பகுதியில் ஏறி இரங்கியுள்ளது. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் கண் முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவரிடம் கத்திமுனையில் வழிப்பறி!

தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சூணைத். கல்லூரி மாணவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள உணவகத்திற்கு இரவு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். இருச்சக்கர வாகனத்தில் சென்ற அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் வீடு திரும்பியபோது பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை நெருங்கியபோது இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்துபேர் கொண்ட கும்பல் முகமது சூணைத்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்துள்ளனர். பின்னர் கத்தி முனையில் மிரட்டிய மர்ம கும்பல் அவர் அணிந்திருந்த வாட்ச், இரண்டு செல்போன்கள், மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சியைந்த முகமது சூணைத், சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தாம்பரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை தொடரந்து, கிண்டி ,எம்ஜிஆர் நகர் பகுதி சேர்ந்த பழைய குற்றவாளிகளான உதயா (20) மூர்த்தி (18) அரவிந்த் (20),கௌதம் (20), அஜித்குமார் (23) என்ற ஐந்து பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் தாங்கள் செய்த குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனம், இரண்டு செல்போன்கள் மற்றும் கைக்கடிகாரம், கத்தி ஆகியவற்றை பறிமுதல் போலீசார் ஐந்து பேரையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!

பெரம்பூர் கொல்லம் தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஆர்த்தி(18). அண்ணா சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். கடந்த ஐந்து வருடங்களாக மணலி மாத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் ஆர்த்தியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஆர்த்தியின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று முந்தினம் நள்ளிரவு ஆர்த்தியின் வீட்டிற்கு அருகே ஆர்த்தியின் காதலன் ஆகாஷ் குடிபோதையில் வந்து நின்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தியின் அண்ணன் திலீப் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டில் வைத்து ஆர்த்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்ட பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Operation Missing Children: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.