ETV Bharat / state

"விமர்சனங்களை ஏற்று கடமையைச் செய்வேன்"- திமுக தலைவராகி ஓராண்டு நிறைவானபின் ஸ்டாலின் பேச்சு!

author img

By

Published : Aug 29, 2019, 4:33 PM IST

சென்னை: இந்த ஓராண்டு காலம் எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கிய பத்திரிகை நண்பர்களுக்கு திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk.stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திமுக தலைவராக நானும், திமுக பொருளாளராக துரைமுருகனும் பொறுப்பேற்று ஓர் ஆண்டு காலம் நிறைவடைந்து இராண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த ஓராண்டு காலம் எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கிய பத்திரிகையாளரான உங்களுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். இது வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆற்றிய பணிகள், தொடர்ந்து அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தோம். மக்கள் பணிகளை உறுப்பினர்கள் சிறப்பாக செய்ய வேண்டும். வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் பணியையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திமுக தலைவராக இருந்த ஓர் ஆண்டு குறித்து ஊடகங்கள், பத்திரிகைகள் பாராட்டியும், விமர்சித்தும் எழுதியுள்ளனர். சிலர் அறிவுரை கூறியுள்ளனர். அதை அனைத்தையும் உள்வாங்கி நிச்சயமாக என் கடமையை செய்வேன். நான் சோதனைகளை, சாதனைகளையெல்லாம் எடைபோட்டு பார்ப்பதில்லை. கலைஞர் வழியில் செல்வோம். அதுமட்டும் உறுதி" என்றார்.

Intro:Body:சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவராக நானும், திமுக பொருளாளராக துரைமுருகனும் பொறுப்பேற்று ஓர் ஆண்டு காலம் நிறைவடைந்து இராண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம். இந்த ஓராண்டு காலம் எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கிய பத்திரிக்கையாளரான உங்களுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

தொடர்ந்து அவர் பேசுகையில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நடைப்பெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். இது வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆற்றிய பணிகள், தொடர்ந்து அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தோம். அதை தொடர்ந்து மக்கள் பணியில் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டும், மேலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் பணியையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும் போன்றவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதனோடு தொடர்ந்து மக்களை சந்திப்பதோடு மக்கள் கோரிக்கை மனுவை அலுவலகத்தில் பெற்று அதை நிவர்த்தி செய்யும் பனியில் ஈடுப்பட வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம்.

திமுக தலைவராக ஓர் ஆண்டு பற்றி ஊடகங்கள், பத்திரிக்கைகள் பாராட்டியும், விமர்சித்தும் எழுதியுள்ளனர். சிலர் அறிவுரை கூறியுள்ளனர். அதை அனைத்தையும் உள்வாங்கி நிச்சியமாக என் கடமையை செய்வேன் என தெரிவித்தார்.

நான் சோதனைகளை, சாதனைகளை எல்லாம் இடைப்போட்டு பார்பதில்லை. கலைஞர் வழியில் செல்வோம் என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.