ETV Bharat / state

மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சென்ற குடிநீர்!

author img

By

Published : Dec 18, 2022, 3:26 PM IST

சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே மெட்ரோ குடிநீரின் ராட்சத குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் ஆறாக தேங்கியது.

மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக செல்லும் தண்ணீர்!
மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக செல்லும் தண்ணீர்!

மெட்ரோ குடிநீர் குழாயில் உடைப்பு: வீணாக சென்ற குடிநீர்!

சென்னை: அம்பத்தூரில் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் தனியார் இன்டர்நெட் கேபிள் புதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் இது போன்ற பணிகளால் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் மட்டுமின்றி மின்சார இணைப்புகளும் சேதம் அடைகின்றன.

நேற்று நள்ளிரவு இதே போல் இன்டர்நெட் கேபிள் புதைக்க ராட்சத இயந்திரங்கள் மூலம் துளைபோடும் பணி நடைபெற்றது. அப்போது அம்பத்தூர் OT பேருந்து நிலையம் எதிரே மெட்ரோ குடிநீரின் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டருக்கு தண்ணீர் ஆறாக பாய்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் வால்வுகளை மூடி தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி அம்பத்தூரிலிருந்து திருமுல்லைவாயில் வரை தண்ணீர் சாலையில் தேங்கியது.

இதையும் படிங்க:அன்னூரில் தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் பிரச்சார நடைபயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.