ETV Bharat / state

நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் பாதிப்பு என்னும் ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; உடனடியாக கிடைத்த தீர்வு

author img

By

Published : Apr 19, 2023, 8:23 PM IST

Updated : Apr 19, 2023, 9:25 PM IST

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் 2000 ஆசிரியர்களை, வரும் ஏப்.28-ல் பணியிலிருந்து விலக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இட்டதாக போடப்பட்ட உத்தரவால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வு பயிற்சிகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் செய்தி வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் தீர்வு கிடைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை வரும் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் பணியில் இருந்து செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வு பயிற்சிகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்காலம் என்பது கல்வியாண்டான ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரையில் கடைபிடிக்கப்படும். ஒரு கல்வியாண்டின் இடையிலும் ஒரு ஆசிரியர் ஓய்வுபெற்றாலும், அவருக்கு மறு நியமனம் வழங்கப்பட்டு, அந்தக் கல்வியாண்டில் இறுதியாக மே 31ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இதற்குக் காரணம், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 60ஆக இருக்கிறது. இந்த ஆண்டு, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக 2000 பேர் இம்மாத இறுதியுடன் ஓய்வுபெற உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி, இம்மாதம் 28ஆம் தேதியுடன் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறையில் இருந்து, ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், ஓய்வுபெற்றும் பணியாற்றி வந்த ஆசிரியர்களை முன்கூட்டியே பணியில் இருந்து செல்லும் படி, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவது ஆசிரியர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டப் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் (NEET), ஜெஇஇ (JEE) பயிற்சி வகுப்புகள் தினமும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், கடைசி நேர பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் பாதிக்காமல் இருக்க, மாற்று ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை ஆணையர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'பள்ளிக்கல்வித்துறையில் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி, கல்வியாண்டில் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டின் இறுதிவரை பணி நீடிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு பணி நீடிப்பு பெற்றுள்ள ஆசிரியர்களை ஏப்ரல் 28ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்க பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

நடப்புக் கல்வியாண்டில் மாணவர்களுக்கு மட்டுமே ஏப்ரல் 28ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலைநாள் மே 31ஆம் தேதி. அதுவரை நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் மற்றும் புதியக் கல்வி ஆண்டுக்கான ஆயுத்தப் பணிகளை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.

மாணவர்களுக்கான வேலை நாட்கள் முடிந்துவிட்டாலும், ஆசிரியர்களுக்கு விடைத்தாள் தேர்வு முடிவுகளை வழங்குதல், பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தல் போன்ற பல்வேறுப் பணிகள் செய்கின்றனர். மேலும், முதுநிலை ஆசிரியர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியும் அளித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள அதே நாளில், ஆசிரியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிடுவது பல ஆண்டுகளாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மன வேதனையை அளித்துள்ளது. எனவே, மே 31ஆம் தேதி வரையில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்' என அதில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, முதல்முறை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் பெரியளவில் செய்திக்கட்டுரையாக வெளியிட்டது.

இந்நிலையில், நமது செய்தி எதிரொலியாக, ஓய்வு பெறும் ஆசிரியர்களை ஏப்ரல் 28ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிப்பதற்குப்பதிலாக, மே மாதம் 31ஆம் தேதி வரை பணியாற்ற அனுமதி வழங்கி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் வாட்ஸ்அப் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்: 25 குழந்தைகளை வகுப்பில் வைத்து பூட்டிய தாளாளர்; தேனியில் நடந்தது என்ன?

Last Updated : Apr 19, 2023, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.