ETV Bharat / state

காவல் ஆணையர் அலுவலகத்தில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

author img

By

Published : Apr 1, 2020, 11:51 PM IST

சென்னை: கரோனா பரவலைத் தடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

dron
dron

நாடு முழுவதும் கரோனா நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி மருந்து வைக்கப்பட்டு அங்கு வரும் பொதுமக்கள் கைகழுவி உள்ளே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினி மருந்தை மாநகராட்சி அலுவலர்கள் தெளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நோய் பரவாமல் தடுக்க டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

வேப்பேரி காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தின் மீது ஏறி நின்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். குறிப்பாக காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் ஒரு கி.மீ வரை உள்ள பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கியூ பிரிவு காவல் துறையின் உதவியை நாடும் அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.