ETV Bharat / state

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறையின் புதிய அறிவிப்புகள்

author img

By

Published : Sep 8, 2021, 5:06 PM IST

சென்னை: ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில் 23 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

புதிய அறிவிப்புகள்
புதிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பேரவையில் 23 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,

  • ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கிவரும் 150 பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும்.
  • 39 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளில் 100 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள், சுற்றுச்சுவர் ரூபாய் 1.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாயக் கூடங்கள் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 23.28 கோடி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடி யினருக்கு ரூபாய் 13.29 கோடி மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும்.
  • வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம் மரவேனரி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 13 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
  • 31 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கும் ரூபாய் 4.50 கோடி மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்படும்.
  • 92 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் 48 விடுதிகளுக்கு ரூபாய் 3.46 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள் வழங்கப்படும்.
  • மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்பு பணி மத்திய அரசு வழங்குவதற்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் 2 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு விழா நாட்களில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவுக் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
  • தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு 92 லட்சம் செலவில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
  • 512 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு 46 லட்சம் மதிப்பீட்டில் மின் அரைப்பான்கள் வழங்கப்படும்.
  • 51 ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆயுதங்களுக்கு 87 இலட்சம் செலவில் இன்வெட்டர் வழங்கப்படும்.
  • தாட்கோ கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு 50 லட்சம் செலவில் மொத்த அளவியல் கருவி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஏனைய நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும் இதற்காக ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
  • பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற பழங்குடியினர் பாரம்பரிய சமூக சுகாதார திறனாளர் களுக்கு சுயமாகத் தொழில் துவங்க 50 ஆயிரம் வீதம் 100 நபர்களுக்கு மானியம் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த தொழில் முனைவோருக்கு அடைகாப்பக சேவை வழங்கும் திட்டம் 2 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
  • 5000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த தொழில் முனைவோருக்கு தொழில் மேலாண்மை பயிற்சிகள் 2 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
  • 5000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தோட்டக்கலை வேளாண் காடுகள் நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் ஒரு கோடியே 70 லட்சம் செலவில் வழங்கப்படும்.
  • 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் செலவில் புதிய மின் மோட்டார் வாங்க தலா 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் இதற்காக இரண்டு கோடி ரூபாய் செலவிடப்படும்.
  • 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 3 கோடி ரூபாய் செலவில் நீர் பாசனத்துக்கான பிவிசி குழாய் கள் வாங்குவதற்கான தலா 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கபடும்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.