ETV Bharat / state

மழை நீரில் நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...!

author img

By

Published : Nov 1, 2022, 12:32 PM IST

வியாசர்பாடியில் மழை நீரில் நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மழை நீரில் நடந்து வந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...!
மழை நீரில் நடந்து வந்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு...!

சென்னை: வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 25வது தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(55). ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று(நவ.1) காலை கடைக்கு செல்வதற்காக பக்தவச்சலம் காலனி 18வது தெரு வழியாக மழைநீரில் நடந்து சென்றார். அப்போது திடீரென தேவேந்திரனின் உடலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த எம்.கே.பி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேவேந்திரனின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பகுதியைச் சேர்ந்த பெரியமேடு போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் பெண் காவலரின் தந்தை சுப்பிரமணி நேற்று(அக்.31) உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இறந்த சுப்பிரமணியின் உடலை அந்த பகுதியில் வைப்பதற்காக அருகில் இருந்த மின்சார பெட்டியில் இருந்து மின்சாரம் எடுத்து மோகன் என்பவர் ஷாமினார் பந்தல் போட்டு மின்விளக்குகள் பொருத்தி உள்ளார். அதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு மழைநீரில் நடந்து வந்த தேவேந்திரனின் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உயிரிழந்த தேவேந்திரனின் மகன் கௌதம் அளித்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் மரணம் நிகழ்தல் என்ற பிரிவின் கீழ் வியாசர்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழையின் பிடியில் சிக்கிய வடசென்னை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.