ETV Bharat / state

பத்திரிகையாளரிடம் மன்னிப்புக்கேட்ட நடிகை ரித்திகா சிங் - என்ன காரணம்?

author img

By

Published : Feb 26, 2023, 12:53 PM IST

ஆக்சன் படங்களில் நடிக்க அதிகம் விரும்புவதாக 'இறுதிச்சுற்று' புகழ் நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

சென்னை: இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங்கின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம், "இன் கார்". இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை ரித்திகா சிங், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரித்திகா சிங், "நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு என்னை மன்னிக்கவும். விமானம் தாமதமாக வந்ததால் நேரமாகி விட்டது. நீங்கள் ரொம்ப நேரமாக காத்திருந்ததற்கு மன்னித்து விடுங்கள். இந்தப் படம் கடத்தல் தொடர்பானது. படப்பிடிப்பு நடந்த காலம் ரொம்ப சவாலானதாக இருந்தது.

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நிறைய உண்மையான விஷயங்களை இந்தப் படத்தில் காட்டி உள்ளோம். இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை உள்ளிட்டப் படங்களுக்கு பிறகு, தமிழ்ப் படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது. எனக்கு நிறைய தமிழ்ப்படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

ஆனால், படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நல்ல கதை அமைந்தால் நிச்சயமாக மீண்டும் நடிப்பேன். எனக்கு காமெடி படம் ரொம்பப் பிடிக்கும். நன்றாக இருக்கும். அதே மாதிரி சண்டை, ஆக்சன் கதாபாத்திரமும் பிடிக்கும். அந்த மாதிரி கதாபாத்திரம் வந்தாலும் நன்றாகத் தான் இருக்கும்" என்றார்.

ஏற்கனவே தேசிய விருது வாங்கிய நிலையில் இந்த திரைப்படத்திற்கும் விருது கிடைக்க வாய்ப்பு இருக்கா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த ரித்திகா, "அவார்டு கிடைக்குமா என்று தெரியாது. அதைப் பற்றி நான் எதுவும் யோசிக்கவில்லை. படம் எல்லோருக்கும் பிடித்தால் ஓ.கே. தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் ஹர்ஷ் வர்தன், "இது கடத்தல் தொடர்பான த்ரில்லிங்கான கதை.‌ டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கதையின் முக்கியத்துவம், அதை நோக்கி செல்கிறது.

ஒரு ஆணின் உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதை இந்த படத்தின் ட்ரெய்லர் மூலம் பார்த்திருப்பீர்கள். இது நமது நாடு. நல்லது, கெட்டது என்று எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது உடம்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அது இயற்கை தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் நிறைய இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதற்கு அதிகபட்சமாக என்ன தண்டனை கொடுப்பீர்கள். இதை நினைக்கும்போது கோபமாக வருகிறது. சிறிய குழந்தைகளை கூட விடுவதில்லை. படத்துக்காக சென்சார் வாங்கிவிட்டோம்.

இந்தப் படத்தில் டெல்லி மட்டும் அல்லாமல் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடக்கும் பாலியல் ரீதியிலான கொடுமைகள் குறித்து பேசப்பட்டு இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: திருக்குறள் ஒப்புவித்தால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம்: நெல்லையில் சூப்பர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.