ETV Bharat / state

விசாரணைக்கு ஆஜரான நடிகர் சூரி

author img

By

Published : Mar 28, 2022, 10:48 PM IST

பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீதான வழக்கில், நடிகர் சூரி, சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்காக ஆஜரானார்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

சென்னை: சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீதான வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், வழக்கின் விசாரணைக்காக சென்னை ஆணையர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவின் துணை ஆணையர் மீனா முன்னிலையில் நடிகர் சூரி ஆஜரானார்.

இதையும் படிங்க: வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் பெறக்கூடாது' - காவல்துறை எச்சரிக்கை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.