ETV Bharat / state

கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. செயற்கை பாதங்கள் பொருத்தப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 12:34 PM IST

Minister Ma Subramanian: அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த 13 வயது சிறுமி அபிநயாவிற்கு, வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட செயற்கை பாதங்கள் பொருத்தப்பட்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

Abhinaya suffering from a rare disease was fitted with prosthetic legs at Chennai Rajiv Gandhi Hospital
கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி அபிநயா

சென்னை: மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா (13) எனும் சிறுமி, எஸ்.எல்.இ (Systemic lupus erythematosus) எனப்படும் இரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, இரு கால்களிலும் இரத்த ஓட்டம் தடைபட்டு, மிகுந்த வலியுடன் முன்பாதங்களும் கருத்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதனை சரி செய்ய முடியாத நிலையில் முதலமைச்சர் கவனத்திற்குச் சென்ற பிறகு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, அச்சிறுமிக்கு இரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை, முடக்குவாதவியல் துறை மற்றும் சிறுநீரக மருத்துவத் துறை போன்ற பல்வேறு உயர்சிறப்பு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்தனர்.

இரத்தத்தில் உள்ள நச்சு குறைவதற்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அதனை சரிசெய்து, இருகால்காளின் முன்பாதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை காயங்களும் நன்றாக ஆறி, தற்போது வலி நன்கு குறைந்து நலமாக உள்ளார்.

மேலும், காயங்கள் முழுவதுமாக ஆறியதால், வெளிநாட்டியிலிருந்து இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இயற்கை கால்களைப் போன்றே உள்ள செயற்கை கால் பாதங்கள், ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் செலவில், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இச்சிகிச்சையினால் அபிநயா எளிதாக நடக்கவும், அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளவும் செய்கிறார்.

இந்த நிலையில், இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, சிறுமி அபிநயா மற்றும் அவரது தாய் ஆகியோர் நேரில் சந்தித்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த 6 மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.