ETV Bharat / state

ART Jewelry Scam: 28 நாட்களில் பணம் திரும்ப கிடைக்கும்; ஏஆர்டி உரிமையாளர் வெளியிட்ட வீடியோ!

author img

By

Published : Jun 12, 2023, 3:38 PM IST

Updated : Jun 12, 2023, 5:46 PM IST

சென்னையில் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏஆர்டி நிறுவனத்தின் உரிமையாளர், 28 நாட்களுக்குள் முதலீடு செய்த நபர்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களுக்கு 28 நாட்களில் பணம் திரும்பக்கிடைக்கும் என ஏஆர்டி உரிமையாளர் வீடியோ பதிவு
மக்களுக்கு 28 நாட்களில் பணம் திரும்பக்கிடைக்கும் என ஏஆர்டி உரிமையாளர் வீடியோ பதிவு

ஏஆர்டி முதலீட்டாளர்களுக்காக வெளியிடப்பட்ட புதிய வீடியோ

சென்னை: ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம், மாதம் 12 ஆயிரம் என கவர்ச்சிக்கரமான திட்டங்களை அறிவித்த நிறுவனம் ஏஆர்டி ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தை ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் நிர்வகித்து வந்தனர். இவர்களின் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் லட்சங்களில் முதலீடு செய்தனர்.

பொதுமக்களின் முதலீடு பணத்தில் ஏஆர்டி மால், ஜூவல்லர்ஸ் என நாடு முழுவதும் தங்களின் கிளைகளை விரிவுபடுத்திய ஏஆர்டி நிறுவனம். சில மாதங்கள் வட்டியை வாரி வழங்கிவிட்டு அதன் பிறகு வட்டியும், அசலும் தராமல் பொதுமக்களை ஏமாற்றியது. இதனால் பாதிக்கப்பட்டோர் ஆயிரத்து 760 பேர், மொத்தம் 26 கோடி ரூபாய் இழந்துவிட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏஆர்டி மால், நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி பல லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராபின் மற்றும் ஆல்வின் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உரிமையாளர்கள் ராபின் மற்றும் ஆல்வினை நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

மேலும், உரிமையாளர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் இருந்த 78 இலட்சம் ரூபாயை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் மோசடி செய்தப் பணத்தை சொத்துக்களாக வாங்கி உள்ளனரா? அல்லது எங்கேயும் பதுக்கி வைத்துள்ளனரா? என்றக் கோணத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்கு இடையே கைது செய்வதற்கு முன்னதாக ஏஆர்டி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டு வருகிறது.

அதில், "ஏஆர்டியில் முதலீடு செய்தவர்களில் நம்பிக்கையுடன் போலீசாரிடம் புகார் அளிக்காதவர்கள் 28 நாட்கள் காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு பணத்தை கொடுத்துவிடுவோம், போலீசாரிடம் புகார் அளித்தவர்களுக்கு பணம் ஐந்து ஆண்டுகள் கழித்து தான் வரும், எங்களது நிலம் மற்றும் நகை ஆகியவற்றை விற்று அதன் பிறகே பணம் கிடைக்க ஏற்பாடு செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ART Jewelry Scam: அதிக வட்டி ஆசைக்காட்டி மோசடி.. ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது!

Last Updated : Jun 12, 2023, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.