ETV Bharat / state

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கேரள மாணவி பலி!

author img

By

Published : Feb 28, 2023, 4:48 PM IST

தாம்பரம் அருகே இரும்புலியூர் ரயில்வே தண்டவாளத்தை செல்போனில் பேசியபடி கடக்க முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கேரள மாணவி பலி!
செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கேரள மாணவி பலி!

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கேரள மாணவி பலி!

சென்னை: கேரளா மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர், நிகிதா. வயது(19). இவர் தாம்பரம் அருகே அனந்தபுரத்தில் பெண்கள் விடுதியில் தங்கி தாம்பரம் தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் நிகிதா இரும்புலியூர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதி நேரம் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நிகிதா வழக்கம்போல் இரும்புலியூரில் மழலையர் பள்ளிக்குச் சென்றபோது தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அருகே செல்போனில் பேசியவாறு ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாகச் சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், செல்போனில் பேசிக் கொண்டவாறு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நிகிதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் முழுவதும் நசுங்கி, சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

இதுகுறித்த அப்பகுதி மக்கள் தாம்பரம் இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்து உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குறும்படை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி உயிரிழந்த தகவலறிந்த சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"கூட்டணி குறித்த கிளைமேக்ஸை இப்போதே சொல்ல முடியாது"- கமல்ஹாசன் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.