ETV Bharat / state

பொறியியல் படிப்பு இடஒதுக்கீடு - முதலமைச்சர் சேர்க்கை ஆணை வழங்குகிறார்

author img

By

Published : Sep 19, 2021, 8:00 PM IST

Updated : Sep 20, 2021, 10:40 AM IST

இடஒதுக்கீட்டின் மூலம் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று (செப்.20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்க்கை ஆணையை வழங்குகிறார்.

பெறியியல் படிப்பு இடஒதுக்கீடு
பெறியியல் படிப்பு இடஒதுக்கீடு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேபோல் தொழிற்கல்விப் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தொழிற்கல்விப் படிப்புகளான பொறியியல், கால்நடை, மீன்வளம், சட்டம், வேளாண்மை உள்ளிட்டவைகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டு நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வந்துள்ளது.

தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன.

அவர்களில் தகுதியான மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் 14 ஆம் தேதி www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டது.

முதல் முறையாக இட ஒதுக்கீடு

முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களில் 15 ஆயிரத்து 660 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்களில் தரவரிசைப் பட்டியில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் 48 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் நான்கு பேருக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 20 பேருக்கும் கடந்த 15 ஆம் தேதி நேரடியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

முதலமைச்சர் வழங்குகிறார்

இடஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் சேர உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று (செப்.20) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 50 மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சேர்க்கை ஆணையை வழங்குகிறார்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்து தகுதி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 169 பேர் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை 20 மற்றும் 21 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். செப். 22 ஆம் தேதி அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அதனை 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். செப்.24 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு - மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாக ஆலோசனை!

Last Updated :Sep 20, 2021, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.