ETV Bharat / state

சர்வதேச 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி: தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

author img

By

Published : Jul 3, 2022, 11:00 PM IST

சர்வதேச 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கவிருப்பதையொட்டி சென்னை விமான நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை விமான நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை விமான நிலையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை : சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளில் இருந்து விமானங்களில் சென்னை விமான நிலையம் வந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஒட்டல்களுக்கு செல்கின்றனா். அதுப்போல் போட்டிகள் முடிந்து தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போதும், சென்னை விமான நிலையம் வழியாகவே செல்ல உள்ளனர். வீரர்கள் மட்டுமின்றி போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதனால் சென்னை விமான நிலையத்தில் இந்த மாதமும்,அடுத்த மாதமும் வெளிநாட்டவா்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். செஸ் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையம் உள்நாடு, பன்னாட்டு முனையங்களில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து உள்ளது.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற உரிய வசதிகள் ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. குடியுரிமை, சுங்க சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை என அனைத்து பிரிவுகளில் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளன.

வீரர்கள், பயணிகளுக்கி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறையினா், செங்கல்பட்டு மாவட்ட போலீசாா் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு வருபவா்களுக்கு எந்த விதமான இடையூறுகள், தடங்கள்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சென்னை விமான நிலையத்தில் உடனுக்குடன் ஏற்படுத்தி கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தில் செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் என்ன? கூடுதலாக என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆய்வு செய்தார். சா்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.மேலும் ஒரு சில மாற்றங்களை செய்ய சொல்லி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியோட் போட்டியின் போது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சிக்கல்கள் எதிர் கொள்வதை தவிர்க்கவும் விரைவாக வெளியேறவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த மறுநாளே ஹோமியோபதி மருத்துவருக்கு பணி ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.