ETV Bharat / state

போதை மாத்திரை விற்பனை - 4 பேர் கைது

author img

By

Published : Jul 29, 2021, 4:08 PM IST

வண்ணாரப்பேட்டையில் மருந்தகம் ஒன்றில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள்
போதை மாத்திரை விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள்

சென்னை: கடந்த 25ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் கல்லறை சாலை, பெரிய மார்க்கெட் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் அந்தப் பகுதியில் செயல்பட்ட மருந்தகம் ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

போதை மாத்திரைகள் பறிமுதல்

இது தொடர்பாக வடமாநில போதை மாத்திரை விற்பனையாளரான ரித்தீஷ் ராஜன் (34), அகமது இஃபால் (30), மணிகண்டன் (19), தாவூத் அகமது (22) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள்
போதை மாத்திரை விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம், பணம், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பவர் பேங்க் செயலி மோசடி - தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.