ETV Bharat / state

காணாமல் போன பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு - தகாத உறவினால் விபரீதம்

author img

By

Published : Oct 16, 2022, 11:15 AM IST

Updated : Oct 16, 2022, 2:28 PM IST

காணாமல் போனதாகக் கருதப்பட்ட பெண், அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு - தகாத உறவினால் விபரீதம்
காணாமல் போன பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்பு - தகாத உறவினால் விபரீதம்

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்துள்ள கொளம்பாக்கத்தில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்தார். கணவனை இழந்த இவரின் மகள், சென்னையில் படித்து வருகிறார். இதனால் தனியாக வசித்து வந்த காளியம்மாள், படாளம் அருகே சாலையோரமாக தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். அதேநேரம் அதே பகுதியில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இவருக்கும் காளியம்மாளுக்கும் பழக்கும் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவில் இருந்துவந்துள்ளனர்.அதேநேரம் காளியம்மாளுக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக காளியம்மாள் திடீரென மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது உறவினர்கள் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனையடுத்து காளியம்மாளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிவக்குமாரின் பழைய இரும்புக் கடையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், பூட்டி இருந்த இரும்புக் கடையின் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். அங்கு காளியம்மாள் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அச்சிறுப்பாக்கம் பகுதியில் சிவக்குமார் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் சிவக்குமார் காவல்துறையினரால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார். பின்னர் சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை நடந்த சம்பவத்தன்று காளியம்மாள் சிவக்குமாருடன் சென்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது மது அருந்திய நிலையில் சிவகுமாரிடம் காளியம்மாள் பணம் கேட்டுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் போதையில் இருந்த காளியம்மாள், சிவக்குமாரை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், காளியம்மாளின் தலையை சுவற்றில் பலமுறை பலமாக மோதியுள்ளார். இந்த நேரத்தில் பலத்த காயமடைந்ததாலும் போதையில் இருந்ததாலும் காளியம்மாள் உயிரிழந்துள்ளார்.

விபரீதத்தை உணர்ந்த சிவக்குமார், காளியம்மாளின் சடலத்தை சாக்கு மூட்டைக்குள் கட்டி, கடையில் வைத்துப் பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Last Updated :Oct 16, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.