ETV Bharat / sports

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்

author img

By

Published : May 20, 2022, 7:21 AM IST

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்
இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தாய்லாந்தின் ஜித்போங் ஜுதாமஸ்ஸை எதிர்கொண்டார்.

இதில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்திய நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம், சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்லும் 5ஆவது வீராங்கனை என்ற பெருமையை நிகாத் ஜரீன் பெற்றுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மேரி கோம் 48 கிலோ எடைப்பரிவில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.