ETV Bharat / sports

உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கம் - வீராங்கனை நிகத் சரீன் சாதனை

author img

By

Published : Mar 26, 2023, 8:30 PM IST

டெல்லியில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

Nikhat
உலக

டெல்லி: உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று(மார்ச்.26) நடைபெற்ற 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச்சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் சரீன் வியட்நாமைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான நிகுயென்னை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகத் சரீன் 5-0 என்ற கணக்கில் நிகுயென்னை வீழ்த்தினார். ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற நிகுயென்னை தோற்கடித்து நிகத் சரீன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். நிகத் சரீன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்துள்ளார்.

அதன்படி, இந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. நேற்று நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் நீது கங்காஸ், ஸ்வீட்டி பூரா இருவரும் தங்கப் பதக்கம் வென்றனர். 48 கிலோ எடை பிரிவில் நிது கங்காசும், 81 கிலோ எடை பிரிவில் ஸ்வீட்டி பூராவும் தங்கம் வென்றனர்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் மேரி கோமுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் ஆவார்.

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம்: 'கம்பேக்' கொடுத்த விராட் கோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.