ETV Bharat / sports

மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்: உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

author img

By

Published : Oct 8, 2021, 9:40 AM IST

துபாய்: சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

Deepak Chahar
Deepak Chahar

ஐபிஎல் 2021 தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - சென்னை அணிகள் மோதின. துபாய் பன்னாட்டு மைதானத்தில் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூ பிளெசிஸ் 76 (55) ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது சென்னை அணியின் கடைசி லீக் போட்டியாகும்.

அதன்பின் களம் இறங்கி பஞ்சாப் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும்விதமாக மைதானத்தில் சுவாரசியமான நிகழ்வு நடந்தது. சென்னை அணியின் வீரர் தீபக் சாஹர் தனது காதலை வெளிப்படுத்தும்விதமாக தனது காதலிக்கு மோதிரம் அணிவித்தார். தீபக் சாஹரின் காதலை அவரது காதலியான ஜெய பரத்வாஜும் ஏற்றுக்கொண்டார்.

இதை தோனியின் மனைவி சாக்சி, உடனிருந்த அனைவரும் கைத்தட்டி காதலர்களை மகிழ்ச்சிப்படுத்தி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

Deepak Chahar
காதலி ஜெய பரத்வாஜ் உடன் தீபக் சாஹர்

தீபக் சாஹர் இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்ததால் தீவிர சென்னை அணி ரசிகர்கள், தீபக் சாஹரின் இந்தச் செயலை கலாய்த்து மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: IPL 2021: முஷ்டி முறுக்கிய கேகேஆர்; ராஜஸ்தானுக்கு டாடா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.