ETV Bharat / sports

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - பெங்களூரு போலீசாரிடம் பிடிபட்ட கும்பல்

author img

By

Published : Sep 23, 2020, 9:06 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

பெங்களூரு: இந்தியன் பிரீமியர் லீக் டி 20 போட்டிகளில் பந்தயம் கட்டியதற்காக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 6 பேரை கைது செய்து, பந்தயத்தில் ஈடுபடுத்தப்பட்ட 6 லட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர்.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பெங்களூரு போலீசாரிடம் பிடிபட்ட கும்பல்
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பெங்களூரு போலீசாரிடம் பிடிபட்ட கும்பல்

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி 20 போட்டிகளில் பந்தயம் கட்டியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு பந்து, ஓவர், ரன்கள் மற்றும் போட்டியில் அணிகளின் வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றின் அடிப்படையில் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் இங்குள்ள பலரிடமிருந்து பெட் கட்டியுள்ளனர்.

பெங்களூரு நகரின் பனஸ்வாடி மற்றும் மல்லேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது ஏற்பட்ட சோகம்!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.