ETV Bharat / sports

சாலையோரக் கடையில் உணவு உண்ட பாண்டியா: வைரல் காணொலி

author img

By

Published : Mar 2, 2021, 8:02 PM IST

விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடரில் விளையாடிவந்த கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா, இன்று சூரத்திலுள்ள சாலையோரக் கடை ஒன்றில் உணவு உண்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Krunal Pandya was seen eating dosa in Surat
Krunal Pandya was seen eating dosa in Surat

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியா. இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரும்கூட. இந்நிலையில் விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பரோடா அணியின் கேப்டனாகச் செயல்பட்டுவருகிறார்.

இந்நிலையில், நேற்றுடன் விஜய் ஹசாரே கோப்பைக்கான லீக் போட்டிகள் நிறைவடைந்ததை அடுத்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத வீரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே சொந்த ஊர் திரும்பிய குர்னால் பாண்டியா, சூரத் அருகே பிப்லோட் என்னும் பகுதியிலுள்ள சாலையோர தோசைக்கடைக்குச் சென்று நெகிழி நாற்காலியில் அமர்ந்து உணவு உண்டார்.

சாலையோரக் கடையில் உணவு உண்ட பாண்டியா

இதனை அருகிலிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். தற்போது குர்னால் பாண்டியா உணவகத்திற்குச் சென்று உணவு உண்ணும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஐசிசி விருதுக்கு அஸ்வின் பெயர் பரிந்துரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.