ETV Bharat / sports

டென்மார்க் ஓபன்: காலிறுதிச்சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!

author img

By

Published : Oct 15, 2020, 5:27 PM IST

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.

Kidambi Srikanth sails into Denmark Open quarters
Kidambi Srikanth sails into Denmark Open quarters

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஓடென்ஸ் விளையாட்டுப் பூங்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.15) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், கனடாவின் ஜேசன் அந்தோணியை எதிர்த்து விளையாடினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே அதிரடியை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி அந்தோணிக்கு அதிர்ச்சியளித்தார்.தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், 21-14 கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஜேசன் அந்தோணியை வீழ்த்தி டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க:ரோனால்டோவை அழைத்து வந்த ஜுவென்டஸ் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.