ETV Bharat / sports

‘ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள்’ - பி.வி. சிந்து

author img

By

Published : Feb 3, 2020, 11:39 PM IST

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள் என இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Exclusive: I will aim for the gold medal in Tokyo Olympics, says PV Sindhu
Exclusive: I will aim for the gold medal in Tokyo Olympics, says PV Sindhu

32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. கடந்த முறை பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து இம்முறை தங்கம் வெல்வாரா என்பதே ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது.

24 வயதான இவர், தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். 2016 ஒலிம்பிக்கைத் தவிர்த்து 2017, 2018 உலக பேட்மிண்டன் என தொடர்ந்து மூன்று தொடர்களில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

பேட்மிண்டனில் சிறந்து விளங்குவதால் இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு சார்பில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் பேட்மிண்டன் ப்ரீமியர் லீக் தொடரில் இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருகிறார்.

இந்நிலையில், இவர், ஹைதராபாத் அணியின் உரிமையாளர் டாக்டர். வி.கே. ராவ் ஆகியோருடன் ராமோஜி ஃப்லிம் சிட்டியில் உள்ள நமது ஈடிவி பாரத் அலுவலத்திற்கு வருகை புரிந்தார். அவரிடம், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்தும், மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பு குறித்தும் அவர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியளில் மனம் திறந்து பேசியுள்ளார்.

கேள்வி: 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றபோது நீங்கள் ஒரு மாதத்திற்கு உங்களது மொபைல் ஃபோனை பயன்படுத்தாமல் இருந்தீர்கள் என உங்களது பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார். மொபைல் போன் பயன்படுத்தாமல் இருந்தது உங்களுக்கு கடினமாக இருந்ததா?

பி.வி. சிந்து

பதில்: நிச்சயம் இல்லை. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்னரே இரண்டு மாதங்களுக்கு நான் மொபைல் போன் பயன்படுத்தாமல் எனது ஆட்டத்தில்தான் கவனம் செலுத்தினேன்.இதனால், மொபைல் போன் இல்லாமல் இருந்தது போரிங்காக நான் உணரவில்லை.

பேட்மிண்டனில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் எனக்கு எப்போதும் இருக்கிறது.நீங்கள் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயத்தை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இறுதியில் அந்த தொடரில் நான் வெள்ளிப்பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு எப்படி தயாராகுரீங்கள்?

பதில்: அதற்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக நான் தயாராகிவருகிறேன். ஜூலையில் டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறுவதற்கு முன்னதாக தற்போது ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனால், அடுத்தடுத்துவரும் ஒவ்வொரு தொடருமே முக்கியம் வாய்ந்த தொடராகதான் இருக்கிறது.

சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது பலரது குறிக்கோளாக இருக்கிறது. எனது குறிக்கோளும் அதுவே. ஆனால், இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், தொடரில் பங்கேற்கும் அனைவரும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்துவார்கள். இதனால், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக நான் கடுமையாக போராட வேண்டும்.

கேள்வி: 125 கோடி மக்களும் நீங்கள் தங்கம் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரேஷர் உங்களுக்கு இருக்கிறதா?

பதில்: இதைதான் பாசிடிவ்வாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் சிறப்பாக விளையாட வேண்டும், போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பலரும் எனக்காக பிரார்தனை செய்கிறார்கள். ஆதரவும் தருகிறார்கள். அது நல்ல விஷயமாக இருக்கிறது.

ஆனால், ஒரு சில சமயங்களில் நீங்கள் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்திப்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். நான் ஒவ்வொரு முறை தொடரில் பங்கேற்கும்போதும், நான் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால், சில சமயங்களில் நான் தோல்வியடையும்போது ரசிகர்களுக்கு வருத்தமாகதான் இருக்கும்.

நான் ஒவ்வொரு முறை பேட்மிண்டன் களத்திற்கு போகும்போது மக்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை யோசிப்பதை விட களத்தில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்திகிறேன். தொடரில் நான் வெற்றிபெற்றால் அது மக்களுக்கு நல்லதுதானே.

கேள்வி: சமீபத்தில் சாய்னா நேவால் பாஜகவில் இணைந்ததை போல எதிர்காலத்தில் அரசியலில் சேர்வது குறித்து உங்களுக்கும் ஏதாவது திட்டம் இருக்கிறதா?

அரசியலில் சேர்வது குறித்து சிந்து பதில்

பதில்: அரசியலில் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இப்போது இல்வே இல்லை. என்னை பொறுத்தவரையில் தற்போது நான் பேட்மிண்டனில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றார்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் குறித்து மனம்திறக்கும் ஷரத் கமல்: சிறப்புப் பேட்டி!

Intro:Body:

Hyderabad: Reigning world champion PV Sindhu on Monday in an exclusive interview with ETV Bharat opened-up about her preparations for the Tokyo Olympics. Sindhu visited ETV Bharat's Hyderabad office and she was accompanied by her Premier Badminton League team  --Hyderabad Hunters -- owner Dr V. K. Rao.

Talking about adding Sindhu in Hyderabad Hunters' squad, Rao accepted that it was difficult to get the Hyderabadi shuttler in his squad as almost every team was bidding for her.

Sindhu played for Awadh Warriors in her first season before moving to Chennai Superstarz in the second edition of the league. The world number six is associated with Hyderabad Hunters from last two years.

Sindhu also said that she is happy that she is playing for HH in PBL as it is her home team.

She also said that the qualifications for Tokyo Olympics are going on and that's why every tournament is important to her. The Olympic silver medallist also said that she would aim for the gold medal in the upcoming Summer Games.

When asked if she feels pressurised as 1.2 billion people believe in her.

The 24-year-old said, "I feel proud that the people of my country is cheering for me. I am honoured that so many people pray for me and believe in me."


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.