ETV Bharat / sitara

மிகப்பெரிய விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன் - எஸ்.ஜே. சூர்யா

author img

By

Published : Nov 27, 2021, 1:26 PM IST

மாநாடு படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த நிலையில், எஸ்.ஜே. சூர்யா அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் (நவம்பர் 25) வெளியானது. டைம் லூப்பை அடிப்படையாக வைத்து வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் பாராட்டிவருகின்றனர்.

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இந்நிலையில் மாநாடு படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்திற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

  • Today I feel that I got the greatest award for my acting skill 👍👍👍 got a call from our SUPER STAR @rajinikanth sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 “SIR, U Made My decade sir 💐💐💐💐🥰🥰🥰🥰🙏🙏🙏🙏Ur kind appreciation giving me a great strength to face this journey 🙏🙏🙏🙏🙏🙏🙏sjsuryah

    — S J Suryah (@iam_SJSuryah) November 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று எனது நடிப்புத் திறமைக்காக மிகப்பெரிய விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன். ரஜினிகாந்த் செல்போனில் அழைத்துப் பாராட்டினர். உங்களுடைய பாராட்டு மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Maanaadu: லிட்டில் சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.