ETV Bharat / sitara

"பிரபாஸை மனதில் வைத்துதான் ஆதிபுருஷ் படத்தை உருவாக்கினேன்"- இயக்குநர் ஓம் ராவத்

author img

By

Published : Aug 23, 2020, 5:08 PM IST

பிரபாஸை மனதில் வைத்துதான் ஆதிபுருஷ் படத்தை உருவாக்கினேன் என்று இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ்
பிரபாஸ்

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம், 'ஆதிபுருஷ்'. டி-சிரீஸ் தயாரிக்கும் இப்படம் தெலுங்கு, இந்தியில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், "பிரபாஸ் மிகவும் சிறப்பான மற்றும் அமைதியான நபர். அவரது கண்கள் மிகவும் அழகாக இருக்கும்.

ஆதிபுருஷ் படத்தை பிரபாஸை மனதில் வைத்துத்தான் உருவாக்கினேன். அவர் இல்லையென்றால் இந்தப்படத்தை ஆரம்பித்திருக்க மாட்டேன்.

நன்கு ஆராய்ச்சி செய்துதான் இந்த வரலாற்றுப் படத்தை இயக்க முடிவு செய்தேன். பிறகு என் குழுவிடம் இதுகுறித்து கூறினேன், அவர்களும் உற்சாகமடைந்தனர். இரண்டு மாதத்திற்கும் மேலாக இப்படத்தின் திரைக்கதை எழுதினேன்" என்று கூறியுள்ளார்.

'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, 2022ஆம் ஆண்டு திரைப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.