இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் இங்கிலாந்து தேசத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் எமி ஜாக்சன். தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த எமி ஜாக்சன் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரைத்தொடர்ந்து டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை இயக்குநர் ராஜமெளலி இயக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் அறிமுகமாகிறார்.
இவரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராவார். ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் இரண்டு முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு 'ஆர்.ஆர்.ஆர்' உருவாகி வருகின்றது. 1920-களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்திற்கு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆங்கிலேய பெண் தேவைப்பட்டது.
இதனால், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடிக்க இங்கிலாந்தை சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸை ராஜமெளலி ஒப்பந்தம் செய்துள்ளார்.