ETV Bharat / sitara

ரசிகர்களிடம் அன்பைப் பரிமாற வந்துட்டேனே! - ட்விட்டரில் கடையைத் திறந்த வைகைப்புயல்

author img

By

Published : Mar 21, 2020, 8:23 AM IST

'ரசிகர்களிடம் அன்பைப் பரிமாறுவதற்கு ட்விட்டரில் கடையைத் திறந்துள்ளேன். அடிக்கடி பேசிக்கலாம்' எனக் கூறி ட்விட்டரில் இணைந்த பிறகு காணொலியை வெளியிட்டுள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலு, விஜய், சூர்யாவுக்கு நன்றி தெரிவித்ததோடு தல அஜித்தை என்றும் மறக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Actor vadivelu joined in Twitter
Actor Vadivelu in Thenali raman getup

சென்னை: சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் உலாவந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு ட்விட்டரில் இணைந்துள்ளார். முதல் பதிவாகக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதள நாயகனாக நாள்தோறும் மீம்ஸ்களின் மூலம் வலம் வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளார்.

இதையடுத்து தனது முதல் பதிவாகத் தெனாலி ராமன் படத்தில் தோன்றிய கெட்டப்புடன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அக்கவுன்ட் திறக்கச் சொல்லி பலர் கூறினார்கள். என்னிடம் பேங்க் அக்கவுன்ட் இருப்பதாக அவர்களிடம் சொன்னேன்.

பின்னர் ட்விட்டரில் திறக்குமாறு சொன்னார்கள். அது என்ன என்று கேட்டபோது ரசிகர்களிடம் அன்பைப் பரிமாறிக்கொள்ளவதற்குத்தான் என்று தெரிவித்தார்கள். உடனே கடையை திறங்கள் என்று வந்துவிட்டேன். இனி நாம இங்கு அடிக்கடி பேசிக்கலாம்" என்று தனது பாணியில் நகைச்சுவை பொங்கவைக்கும் விதமாகத் தெரிவித்துள்ளார்.

  • பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் 🙏

    என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு 🙏#PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன் 🙏 pic.twitter.com/dSjWRr0kVs

    — Actor Vadivelu (@VadiveluOffl) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தக் காணொலியுடன், "பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்துபோய்விட்டது. அதனால் #ரஜினியைப் போல திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.

#PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரெண்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாகத் திரைப்படங்களில் தோன்றாத வடிவேலு, தனது பழைய காமெடி காட்சிகளாலும், சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாலும் பொதுமக்களைச் சிரிக்கவைத்து-வருகிறார்.

கடந்த வாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்ற அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, "2021இல் நான் முதலமைச்சர் ஆகலாம்னு இருக்கேன்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இதைத்தொடர்ந்து தற்போது ட்விட்டரில் அவதாரம் எடுத்துள்ளார். வடிவேலுவின் முதல் ட்விட்டை தற்போது வரை 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் லைக்கும், நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீ-ட்விட்டும் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா... அது அவருக்கே தெரியாது': கலாய்த்த வடிவேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.