நடிகர் அருண் விஜய் மகனை தொடர்ந்து தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் நடிகராக அறிமுகமாகிறார். 2014ஆம் ஆண்டு இயக்குநர் ராகவன் இயக்கத்தில் 'மஞ்சப்பை' படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது. அதன் பின்னர், ஆர்யாவை வைத்து "கடம்பன்" படத்தை இயக்கியிருந்தார். தற்போது, தனது மூன்றாவது படமாக பிரபுதேவாவை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகிறார்.
தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘பஹிரா’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா அடுத்ததாக ராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நிபுனை சுற்றித்தான் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். டிக்கிலோனா படம் அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திரையுலகில் காலடி எடுத்துவைக்கும் அருண் விஜயின் மகன்