திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நேற்று முன்தினம் (டிச. 29) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற அமிதாப் பச்சனுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், அணில் கபூர், கரன் ஜோஹர், அர்ஜுன் கபூர், மூத்த பின்னணிப் பாடகி லதா மகேஷ்கர் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
-
T 3596 - ..my gratitude and my affection to the people of this great Country, INDIA .. for this recognition ..https://t.co/2vnNhjpyDQ pic.twitter.com/HpUMC3iCKu
— Amitabh Bachchan (@SrBachchan) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 3596 - ..my gratitude and my affection to the people of this great Country, INDIA .. for this recognition ..https://t.co/2vnNhjpyDQ pic.twitter.com/HpUMC3iCKu
— Amitabh Bachchan (@SrBachchan) December 30, 2019T 3596 - ..my gratitude and my affection to the people of this great Country, INDIA .. for this recognition ..https://t.co/2vnNhjpyDQ pic.twitter.com/HpUMC3iCKu
— Amitabh Bachchan (@SrBachchan) December 30, 2019
இதனிடையே விருது வழங்கி கவுரவித்தமைக்காக அமிதாப் பச்சன் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், "இந்த அங்கீகாரம் அளித்து கவுரவித்தமைக்காக மகத்தான இந்திய நாட்டின் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.