ETV Bharat / opinion

இலங்கையில் தொடரும் குடும்ப அரசியல்

author img

By

Published : Aug 11, 2020, 11:01 PM IST

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 145 இடங்களை வென்று தேர்தல் வெற்றியைப் பெற்றிருப்பது முக்கியமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று என மூத்த பத்திரிகையாளர் தில்ருக்சி ஹண்டுன்னெட்டி தெரிவித்துள்ளார்.

இலங்கை
இலங்கை

ராஜபக்சவின் குடும்ப அரசியல் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா (SLPP) இப்போது பெற்ற பெரும் வெற்றியால் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இதனால் முன்னாள் நிர்வாகம் எடுத்த பல நடவடிக்கைகளை, குறிப்பாக 19வது அரசியலமைப்பு திருத்தம், மாற்றியமைக்க உள்ளது

புதிய அரசை அமைப்பதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்ச, நாட்டின் இரண்டு முறை அதிபரும் தனது மூத்த சகோதரருமான மஹிந்தாவிற்கு புதிய பிரதமராக 9ம் தேதி காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (14) பவுத்த வழிபாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய இடமாகவும், கண்டி மன்னர்களின் கடைசி அரண்மனையுமான வரலாற்று சிறப்புமிக்க மாகுல் மடுவா அல்லது கண்டியில் உள்ள புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் அரச பார்வையாளர் மண்டபத்தில், பதவியேற்றுக் கொள்ளும்.

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் கோவிட் பாதிப்புக்குள்ளான தீவு பொருளாதாரத்தை மாற்றுவதற்கான செயல் திட்டம் என இரண்டு முன்னுரிமைகள் கொண்ட ஒரு புதிய அரசில் மேலும் மூன்று டஜன் துணை மற்றும் மாநில அமைச்சர்கள் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளவிருந்தாலும், அமைச்சரவையின் எண்ணிக்கை 26க்கு மேல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது:

தீவின் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் 45 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்க முடியும். 19வது திருத்தத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பரப்புரை செய்துள்ள SLPP, குறைந்தபட்சம் அதை ரத்து செய்யவோ அல்லது அதன் விதிகளை பயன்படுத்துவதை விட திருத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தவோ ஆர்வமாக உள்ளது.

அதற்கு பதிலாக, SLPP தனது அரசியல் கூட்டணி கட்சிகள் இல்லாத ஒரு அமைச்சரவையை கொண்டிருக்க விரும்புகிறது, இதன் மூலம் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் சுதந்திரமான முடிவுகளை எடுத்து பலமான எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தில் அதன் செயல்திட்டங்களை முன்வைக்க நினைக்கிறது.

குடும்ப ஆட்சி

SLPP கட்சியினரின் கூற்றுப்படி, குடும்ப ஆட்சி என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் போர்வையில் இருந்தாலும், தேசிய நலனுக்கு, அதாவது பெரும்பான்மையினரின் நலனுக்கு, சேவை செய்ய முடியும் என்று ராஜபக்சக்களால் வாக்காளர்களை நம்ப வைக்க முடிந்தது;.

இலங்கையில் தேர்தல் முடிவுகள் வலதுசாரி அரசியலில் உலகளாவிய வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன, அங்கு தேர்தலில் வாக்களிக்க முடிவெடுப்பதில் தேசிய பாதுகாப்பு என்பது முன்னுரிமை பெறுவதோடு தேசியவாதம் பெரும் பங்கு வகிக்கிறது. இன-மத அடிப்படையில் வலுவாக பிளவுபட்டுள்ள ஒரு நாடு, தனி அரசியல் குடும்பத்தினருக்கு அதிகாரத்தை அதிக அளவில் அளித்ததையும், பெரும்பான்மையான மக்கள் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு அளிப்பதற்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லாத விருப்பத்தையும் இது குறிக்கிறது என்கிற விஷயம் இலங்கையை வேறுபடுத்துகிறது,

இருப்பினும் தேசியவாதம் மற்றும் பிரிவினை அதிகரித்து வருகிற போதிலும் இலங்கை மக்களின் பொதுத் தேர்தல் நடத்தைக்கு இது முற்றிலும் மாறுபட்டது. 1977ல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மகத்தான வெற்றியைத் தவிர, இலங்கை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு போதிய பெரும்பான்மை மட்டுமே வழங்கியுள்ளனர், ஆனால் 2020ஆம் ஆண்டில், தீவிர தேசியவாதம், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் பிரதான எதிர்க்கட்சி அரசியலை நிராகரிப்பது போன்ற காரணங்களால் இலங்கை பொதுஜன பெரமுனாவுக்கு (SLPP) முன்னெப்போதும் கண்டிராத வெற்றியை அளித்தது.

குடும்ப ஆட்சிக்கான பாதை

பிரதம மந்திரி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச ஆகஸ்ட் மாத தேர்தலில் மிகவும் வெற்றிகரமானவராக உருவெடுத்து, 527,364 வாக்குகளை பெற்றதன் மூலம் புதிய சாதனையை படைத்து, தீவின் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகராக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் முன்னுரிமை பட்டியலில் உள்ளனர், மஹிந்த ராஜபக்ச (வடமேற்கில் உள்ள குருநாகலாவிலிருந்து), அவரது மகன் நமல் (பூர்வீக தென்கோடியில் உள்ள ஹம்பாந்தோட்டாவிலிருந்து) மற்றும் முதல் முறையாக போட்டியிட்ட, சஷீத்ரா ராஜபக்ச ( தென்கிழக்கில் மொனராகலாவிலிருந்து) மற்றும் நிபூனா ரனவகா (தெற்கில் மாதாராவிலிருந்து). மூத்தவர்கள் நிலையில், மஹிந்தா மற்றும் அவரது மூத்த சகோதரர் சாமல் (சஷீந்திராவின் தந்தை) இருவரும் உள்ளனர், அதைத் தொடர்ந்து அவர்களது சொந்த மகன்களும், அண்ணன் மகனும் இரண்டாவது நிலையில் உள்ளனர்.

மஹிந்தாவின் இளைய சகோதரரான கோத்தபய ராஜபக்ச, நவம்பர் மாதம் நாட்டின் நிர்வாகத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

நடிகரிலிருந்து அரசியல்வாதியான ஜெயந்த கெதகோடாவுக்கு பதிலாக பாசில் ராஜபக்ச SLPPன் நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கட்சியினர் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக அரசியல் குடும்பமாக தன்னை வளர்த்துக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் பெரும் புகழ், குடும்ப உறுப்பினர்களை வெவ்வேறு தேர்தல் தளங்களிலிருந்து கொண்டு வந்தது, இதனால் குடும்பம் மற்றும் SLPP அரசியலுக்கான ஆதரவின் அடிப்படைக்கு வழி வகுத்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை,

ஆசிய அரசியலில் நன்கு அறியப்பட்ட ஒரு பாரம்பரியம் என்றாலும், ஒரு குடும்பத்தின் மீது அதிகாரம் முழுமையாக குவிந்துவிடுமோ என்ற அச்சங்களை ஒதுக்கி வைத்து, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிபர் மற்றும் சட்டமன்றத்திற்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையை உறுதி செய்வதற்கான அதிகாரங்களைப் பிரிப்பதற்கான ஒரு குடும்பத்திற்கு அரசியல் அதிகாரத்தை ஒப்படைக்க ஒரு வாக்காளர் எடுத்த முடிவுதான் இங்கு குழப்பமான போக்காக தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) தோற்கடிப்பதற்கான ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தேர்தல் பிரதிபலிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே கலக்கமடைந்த ஒரு ஆட்சி, பெரும்பாலும் குறுக்கு நோக்கங்களுக்காகவும், இலங்கையின் பெரும்பான்மையினரால் ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதுகாப்பு குறைபாட்டிற்காகவும் கண்டனம் செய்யப்பட்ட ஒரு கூட்டணி, போன்றவை UNP-ன் மிகவும் அவமானகரமான தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

இதற்கு நேர்மாறாக UNP ஆட்சியின் போது ஏராளமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று நிரூபிக்க தவறி விட்டது, ஆனால் ராஜபக்சக்கள் பொது நம்பிக்கையை பெற்றனர். மே 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.டி.டி.இ) எதிரான போரில் வெற்றி பெற்றதற்காகவும், பாதுகாப்பு உணர்வுடன் இருந்ததற்காகவும் அவர்கள் பெருமைப்படுகிறார்கள்.

ராஜபக்சக்கள் வாக்காளர்களின் மனநிலையை சரியாக கணித்து, ஆரம்பத்தில் இருந்தே முக்கிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களுடன் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு உறுதியளித்தனர்.

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்

225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 150ஐ எட்டுவதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெறும் திறனுடன், 145 இடங்களைக் கொண்ட SLPP ஒரு வலுவான நிலையில் உள்ளது

அரசின் முக்கிய நோக்கம் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் 1978 அரசியலமைப்பை திருத்துவதாகும். முந்தைய நிர்வாகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட, அதிபரின் நிர்வாக அதிகாரத்தை குறைத்து பல நிறைவேற்று அதிகாரங்களை திறம்பட இணைத்து, சுதந்திரமாக முக்கிய பொது சேவைகளை நிறைவற்றுவதற்கு வழிவகுத்த 19வது திருத்தத்தை திருத்துவதோ அல்லது ரத்து செய்வதோ இங்கு முதன்மையான விருப்பமாக உள்ளது. இது முன்பு அதிபரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இத்தகைய நடவடிக்கைகள், முந்தைய அரசாங்கம் எடுத்த சில முற்போக்கான நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும்.

இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு வழிமுறையான மாகாண சபைகள் அமைக்கப்பட்ட 13வது திருத்தத்தின் நோக்கத்தைக் குறைப்பதற்கான திருத்தங்களை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அத்தகைய நடவடிக்கை கடுமையான அரசியல் தாக்கங்களைக் கொண்டிருக்கும், இது 1987 இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் அதன் வேர்களைக் கண்டுபிடிக்கும் அரசியலமைப்புத் திருத்தமாகும்.

மாற்றங்களைக் காண அதிக வாய்ப்புள்ள மற்றொரு சட்டம் தகவல் உரிமைச் சட்டம், இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் உலகில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் ஒன்றாகும்.

எதிர்க்கட்சியின் பங்கு

தங்களது வெற்றியைக் கருத்தில் கொண்டு, வேகமான நகர்த்தல்களையும் விரைவான மாற்றங்களையும் செய்ய SLPP தயாராக உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஒரு பிரபல பவுத்த கோவிலான கேளனி ராஜா மகா விகாராய-வில் நாளை (9) பிரதமராக பதவியேற்கவுள்ளார், புதிய அமைச்சரவை அடுத்த நாள் (10) பதவியேற்கும் மற்றும் புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் 20 அன்று கூடும்.

ஆனால் அரசியல் செயல்திட்டத்தை பொருளாதார அமைப்பை சரிசெய்யும் பணிகளால் பெரிதும் குறைக்க வேண்டியிருக்கும், ஏனெனில் இந்தியப் பெருங்கடல் தீவு, அதன் தற்போதுள்ள கடன் சுமையில், கோவிட்-19 தொற்றுநோயால் ஆழமாக பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார சுமைகளைத் தணிக்க அவர்கள் ஆதரித்த அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகள் குறித்த நம்பிக்கை தேவைப்படும். இது இலங்கையை ஒரு ஆபத்தான நிலையில் வைத்து, அதன் கடன்களை அதிகமாக்கி, சீனாவின் செல்வாக்கிற்கு மேலும் தள்ளும்.

இதையும் படிங்க: "காலிஸ்தான் கொடியை செங்கோட்டையில் ஏற்றினால் சன்மானம் வழங்கப்படும்"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.