ETV Bharat / jagte-raho

திண்டுக்கல் அருகே பேக்கரியில் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது!

author img

By

Published : Dec 13, 2019, 11:49 AM IST

திண்டுக்கல்: முத்தனம்பட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியைக் காட்டி தகராறில் ஈடுபட்ட சரவணன் என்பவரை ரெட்டியார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

threatening knife
threatening knife

திண்டுக்கல் முத்தனம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர், அதே பகுதியில் பேக்கரி நடத்திவருகிறார். இங்கு பணிபுரியும் நாகலட்சுமி என்பவர் வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, வெயிலடுச்சாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், நாகலட்சுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாலிபர் கத்தியைக்காட்டி மிரட்டும் சி.சி.டி.வி. காட்சி

இது தொடர்பாக பேக்கரியின் உரிமையாளர் முருகன் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார், சரவணனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்நிலையில், பட்டப்பகலில் பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Intro:திண்டுக்கல் 13.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்ட வெயிலடுச்சாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரை ரெட்டியார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

Body:திண்டுக்கல் 13.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்ட வெயிலடுச்சாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரை ரெட்டியார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் -பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முத்தனம்பட்டி கிராமம். முத்தனம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் இதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த பேக்கரியில் பணிபுரியும் நாகலட்சுமி வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வெயிலடுச்சாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் பேக்கரி கடைக்குள் நுழைந்து கடையில் வேலை செய்து வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியும் ஆபாசவார்த்தையால் பேசி கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டு அப் பெண்ணிடம் வாக்குவாதம் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அந்த பெண் தேம்பி அழுத ஆரம்பித்த உடனா பின்பு அருகில் இருந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டிய நபரை வெளியே அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக பேக்கரியின் உரிமையாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்சத்திரம் காவல்துறை சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய சரவணன் என்பவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் .

நேற்று பட்டபகலில் பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகின.Conclusion:திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி தகராறில் ஈடுபட்ட வெயிலடுச்சாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரை ரெட்டியார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.