திண்டுக்கல் முத்தனம்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர், அதே பகுதியில் பேக்கரி நடத்திவருகிறார். இங்கு பணிபுரியும் நாகலட்சுமி என்பவர் வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, வெயிலடுச்சாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், நாகலட்சுமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக பேக்கரியின் உரிமையாளர் முருகன் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார், சரவணனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்நிலையில், பட்டப்பகலில் பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.