ETV Bharat / international

அமெரிக்காவில் தம்பதி உள்பட 3 இந்தியர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Dec 28, 2022, 1:00 PM IST

அமெரிக்காவின் அரிசோனாவில் உறைந்த ஏரிக்குள் மூழ்கிய தம்பதி உள்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் தம்பதி உள்பட 3 இந்தியர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு
அமெரிக்காவில் தம்பதி உள்பட 3 இந்தியர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

வாஷிங்டன்: ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரின் பலப்பர்ருவைச் சேர்ந்தவர் முட்டனா நாராயணா (40). இவரது மனைவி ஹரிதா (36). இருவரும் அரிசோனாவில் உள்ள சாண்ட்லரில் வசித்து வந்தனர். அதேபோல குண்டூரை சேர்ந்த மதிசெட்டி கோகுல் என்பவரும் அரிசோனாவில் வசித்து வந்தார்.

இவர்கள் 3 பேரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, டிசம்பர் 26ஆம் தேதி அரிசோனாவின் கோகோனினோ கவுண்டியில் உள்ள வூட்ஸ் கேன்யன் என்னும் உறைந்த ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் ஏரியின் மீது நடந்து செல்லும்போது திடீரென விரிசல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கியுள்ளனர்.

இதைக்கண்ட சக சுற்றுலாப்பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் 3 பேரின் உடலை தேடி வந்த நிலையில், நேற்று (டிசம்பர் 27) மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் தரப்பில், இந்த சம்பவ நாளன்று முதலில் ஹரிதா தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற அவரது கணவர் நாராயணா மற்றும் மதிசெட்டி கோகுல் இருவரும் அடுத்தடுத்து மூழ்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ட்வின் டவரில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்த 2 ரஷ்யர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.