ETV Bharat / international

Morocco earthquake : மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 300 பேர் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 9:10 AM IST

Morocco earthquake : Earthquake hits Morocco : வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Earthquake
Earthquake

ராபட் : அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் எல்லையை ஒட்டிய வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7ஆக பதிவானதாக மொராக்கோ நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.அதேநேரம் 6 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்தாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பழங்கால நகரமான மராக்கே மிக அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மராக்கே நகரில் இருந்த பழங்கால ரெட் வால்ஸ் கட்டடங்கள் இடிந்து சேதமானதாக அப்பகுதி மக்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நள்ளிரவு நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் பலர் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில், அதிகளவு உயிர் சேதம் நிகழ்ந்து இருக்கக் கூடும் என மொராக்கோ உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்னர்.

இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் அதிகளவில் கட்டடங்கள் இடிந்து கிடப்பதால் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 296 என்ற உயிரிழப்பு கணக்கு அதிகரிக்கக்கூடும் என மீட்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

உறுதியான நிலப்பரப்பை கொண்ட மொராக்கோ நாட்டில் நில அதிர்வு ஏற்பட்டு இருப்பது வியப்பையும் அதேநேரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக நில அதிர்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு முன் கடந்த 1960ஆம் ஆண்டு அகதிர் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அதன் பின் நீண்ட நாட்களுக்கு பின் வட ஆப்பிரிக்க நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : Chandrababu Naidu arrest : ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது! ஆந்திர சிஐடி போலீசார் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.