ETV Bharat / international

ஆப்கானிஸ்தான் மசூதி தாக்குதல்: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு!

author img

By

Published : Oct 21, 2019, 9:12 AM IST

காபூல்: ஆப்கானிஸ்தான் மசூதி மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

Afghanistan Mosque blast

ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லையோர (பாகிஸ்தானையொட்டி) பகுதியில் அமைந்துள்ள நங்கர்ஹார் மாகாணத்தின் ஜாவ் தாரா கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

“நான்கு பேர் மாயமாகியுள்ளனர். அவர்களின் உடல்களைத் தீவிரமாகத் தேடிவருகிறோம். இந்த தாக்குதலில் இதுவரை 72 பேர் இழந்துள்ளோம், 30 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டுகளை வைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று இன்னும் தெளிவாகவில்லை" என அக்கிராமவாசி ஒருவர் கூறினார். இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என தலிபான் பயங்கரவாதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தலிபான் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்றுவந்த அமைதி பேச்சுவார்த்தை கடந்த மாதம் திடீரென தோல்வியில் முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை அந்நாட்டு மக்களுக்கு எழுந்துள்ளது. முன்னதாக, நங்கர்ஹாரில் காவல் துறை தலைமையகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Afghanistan mosque blast 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.