ETV Bharat / international

தலிபான்களுடன் ஆப்கான் அரசு தொடர்ந்து சண்டையிடும்- அம்ருல்லா சலே

author img

By

Published : Aug 13, 2021, 11:01 PM IST

தலிபான்களுடன் ஆப்கான் அரசு தொடர்ந்து சண்டையிடும் என ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.

afghan-govt-to-continue-fight-against-taliban-amrullah-saleh
தலிபான்களுடன் ஆப்கான் அரசு தொடர்ந்து சண்டையிடும்- அம்ருல்லா சலே

காபூல்: தலிபான்களுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட ஆப்கான் அரசு முடிவு செய்துள்ளதாகவும், நாட்டில் உள்ள தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய எதிர்ப்பை அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கும் எனவும் ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர், அம்ருல்லா சலே ட்வீட் செய்துள்ளார்.

மேலும், நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்த பாதுகாப்பு படைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்கத்தால் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலைகொண்டிருந்த நேட்டோ படைகள் முழுவதுமாக விலகுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நாட்டின் பல முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

அப்பாவி மக்கள் அங்காங்கே தலிபான்கள் கொலை செய்வதாகவும், மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தலிபான்களுக்கு நல்லதொரு பதிலடியை கொடுக்க, தற்போது ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி புதிய ராணுவ தளபதியை நியமித்துள்ளார்.

இதையும் படிங்க: 30 நாளில் காபூல் தலிபான்கள் கைவசம்- அமெரிக்காவின் மதிப்பீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.