ETV Bharat / international

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெகிழ்ச்சியான முறையில் பிரேசில் அஞ்சலி

author img

By

Published : Jul 3, 2020, 4:55 PM IST

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா பெருந்தொற்றால் இதுவரை 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஏசுநாதர் மூலம் நெகிழ்ச்சியான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Christ
Christ

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தென்அமெரிக்க நாடான பிரேசில் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை சுமார் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்துவருவதால் பிரேசில் அரசு பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரியோ டி ஜெனிரோவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஏசுநாதர் சிலை வண்ண ஒளி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.

உயிரிழந்தவர்கள் மட்டுமில்லாமல் நோய் பாதிப்பால் போராடிவருபவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு செலுத்தும் விதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்த நிகழ்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சோதனைக் காலகட்டத்தில் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும் நோக்கிலேயே தியாகத்தின் வடிவமாகக் கருதப்படும் ஏசுநாதரை தேர்வு செய்தோம் என ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

இதையும் படிங்க: மியான்மரில் நிலச்சரிவு 125 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.