ETV Bharat / entertainment

Thani Oruvan 2: ஏஜிஎஸ் வெளியிட்ட 'தனி ஒருவன் 2' அப்டேட்.. சென்னையில் 'தனி ஒருவன்' சிறப்பு காட்சியை கொண்டாடிய படக்குழு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 1:37 PM IST

8 years of thani oruvan Movie: தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

தனி ஒருவன் 2 அப்டேட் வெளியீடு

சென்னை: இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்து கடந்த 2015இல் வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. திரையரங்குகளில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

இப்படத்தில் மித்ரன் என்கிற போலீஸ் கதாபாத்திரத்திரமும், சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லன் கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தின் ஹீரோவை விட அறிவார்ந்தராக அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பல தமிழ் படங்களில் ஹீரோவை விட வில்லன் உடலளவில் மட்டுமே வலிமை மிக்கவராக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தனி ஒருவன் படத்தில் இவ்வாறு வித்தியாசமான திரைக்கதை விறுவிறுப்பை கூட்டியது.

தனி ஒருவன் படத்திற்கு முன்பாக இயக்குநர் மோகன் ராஜா ரீமேக் படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ரீமேக் ராஜா என கலாய்த்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோகன் ராஜா தனது சொந்த கதையில் இயக்கிய ‘தனி ஒருவன்’ திரைப்படம் அமைந்தது. மேலும் தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கும், இந்த படத்திற்கு இசையமைத்த ஹிப் ஹாப் தமிழாவுக்கும் அவர்களது திரைவாழ்வில் திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்நிலையில் தனி ஒருவன் 2ஆம் பாகம் எடுக்க வேண்டும் என முதல் பாகம் வெளியானது முதல் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறது.

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. தனி ஒருவன் முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 2ஆம் பாகத்தின் அறிவிப்பை ப்ரோமோவுடன் வெளியிட்டது. முதல் பாகத்தின் கதைப்படி வில்லனை தேடி ஹீரோ சென்ற நிலையில், இந்த பாகத்தில் ஹீரோவை தேடி வில்லன் வருவது போல திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் நேற்று சென்னை ஏஜிஎஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சிகு ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோர் வருகை புரிந்தனர்.

இதையும் படிங்க: ’டாடா’ வெற்றிக்கு பிறகு ’ஸ்டார்’ராக உருவெடுக்கும் கவின்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.