ETV Bharat / entertainment

மலையாள நடிகை அபர்ணா நாயர் மர்மமான முறையில் உயிரிழப்பு?... போலீசார் விசாரணை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 4:09 PM IST

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்: மலையாள சினிமாவில் பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் அபர்ணா நாயர். அபர்ணா நாயர் தனது அபார நடிப்பு மூலம் மலையாள ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். நடிகை அபர்ணா 2005ஆம் ஆண்டு மயூகம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ரன் பேபி ரன், செகண்ட்ஸ், அச்சயன்ஸ், மேகதீர்த்தம், முடுகாவ், கார்ட் சமக்ஷம் பாலன் வகில், கல்கி உள்ளிட்ட படங்களிலும் சந்தனமழா, அத்மசகி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அபர்ணா நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு இறந்து கிடந்துள்ளார். அப்போது அவரது தாயாரும் சகோதரியும் வீட்டில் இருந்துள்ளனர். அபர்ணா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கரமனா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை அபர்ணா நாயருக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி த்ரயா மற்றும் க்ரித்திகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மலையாள நடிகை தனது வீட்டில் சத்தேகத்துக்குரிய முறையில் இறந்தது மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: விஜயின் புதிய படம் அப்டேட் முதல் SK-21 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு வரை கோலிவுட் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.