ETV Bharat / city

வீடு அபகரிப்பு மற்றும் தாக்குதல்: திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Apr 24, 2022, 10:25 PM IST

வீட்டை அபகரிக்க முயன்றதாகவும், வீட்டின் உரிமையாளரை தாக்கியதாகவும் திமுக கவுன்சிலர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Cheating Case
Cheating Case

வேலூர்: சென்னையை சேர்ந்த வாசன் என்பவர், சத்துவாச்சாரியில் சொந்தமாக வீடு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீட்டை, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக கவுன்சிலராக இருந்த பாட்சி எனும் ஜெயசங்கருக்கு வாடகைக்கு கொடுத்ததாகவும், ஆனால் ஜெயசங்கர் வீட்டு வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாசன் தனது உறவினர்களுடன், அவரது வீட்டை பார்க்க சென்றபோது, ஜெயசங்கரின் மகனும் தற்போதைய திமுக கவுன்சிலருமான சிதீஷ், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசனின் உறவினர்களை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வாசனின் உறவினர்கள் 7 பேர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், திமுக கவுன்சிலர் சதீஷ், அவரது தந்தை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!- 28 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.