ETV Bharat / city

ரூ.100 கோடி மதிப்பில் தனி கூட்டு குடிநீர் திட்டம் - அமைச்சர் கே.என் நேரு

author img

By

Published : Dec 21, 2021, 8:22 PM IST

மணப்பாறை நகரத்திற்கு மட்டும் தனி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.100 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட இருக்கிறது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

தனி கூட்டு குடிநீர் திட்டம்
தனி கூட்டு குடிநீர் திட்டம்

திருச்சி: மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமையில் மக்களை தேடி மனுநீதி முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.

தனியார் மண்டபத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மண்டப வளாகத்திற்குள் நுழைந்த அமைச்சர்களின் காரை சூழ்ந்து தங்களின் மனுக்களை அமைச்சர் கையிலே கொடுத்து விட வேண்டும் என்று அனைவரும் அவரை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தனி கூட்டு குடிநீர் திட்டம்

இதையடுத்து ஒருவழியாக அரங்கத்தின் மேடைக்கு வந்து சேர்ந்த அமைச்சர்கள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்க தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், “மணப்பாறை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் கண்டிப்பா செய்வார்

மேலும், அதை விரிவுபடுத்தி அனைத்து விவசாயிகளும் அதில் பயன்பெறும் வகையிலான அந்த பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் செய்வார். இதனையடுத்து வருகின்ற 30ஆம் திருச்சி மாவட்டத்தில் வாங்கப் பெற்ற நாற்பதாயிரம் மனுக்களை ஆராய்ந்து, அவர்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.

தனி கூட்டு குடிநீர் திட்டம்

மணப்பாறை நகரத்திற்கு மட்டும் தனி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.100 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக அதிமுக இடையே மோதல் - எம்எல்ஏ ஜெயராமன் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.