ETV Bharat / city

கல்யாணராமன், வேலூர் இப்ராஹிம்மை குண்டர் சட்டத்தின் கைது செய்யக்கோரி மனு!

author img

By

Published : Feb 9, 2021, 2:40 PM IST

திருப்பூர்: பாஜகவின் கல்யாணராமன், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து திருப்பூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என இஸ்லாமிய இயக்கங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

Islamic People
Islamic People

கோவை மாவட்டத்தில் தெருமுனைப்பரப்புரை ஒன்றில் பேசிய பாஜகவின் கல்யாணராமன், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாக, இஸ்லாமியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர்.

இந்நிலையில் பாஜகவின் கல்யாணராமன், ஜெய்சங்கர், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர்களை திருப்பூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இஸ்லாமிய பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இன்று (பிப்.9) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.