திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுவதாக என்று இட்டுக்கட்டிக் காட்டப்படுகிறது. மோடியின் தீய செல்வாக்கு தமிழ்நாட்டில் தீண்ட முடியாது என்பதைத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் நிரூபித்து காட்டியுள்ளன.
நான் போட்டியிட்ட தொகுதியில் ஆறு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் அதிமுகவின் சக்தி வாய்ந்த அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோரின் வரம்பற்ற செல்வாக்கு தாக்குதல் நடத்திய நிலையிலும், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., கட்சி சார்பில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்றுள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், அனைத்து முன்னேற்றத்தின் தேவைகளை முன்வைத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்" என்று கூறினார்.