ETV Bharat / city

'மோடியின் தீய செல்வாக்கு, தமிழ்நாட்டை சீண்ட முடியாது..!' - எம்பி சுப்பராயன்

author img

By

Published : May 24, 2019, 5:47 PM IST

திருப்பூர்: "மோடியின் தீய செல்வாக்கு தமிழ்நாட்டில் தீண்ட முடியாது என்பதைத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் நிரூபித்துக் காட்டியுள்ளது" என்று திருப்பூர் எம்பி சுப்பராயன் தெரிவித்தார்.

இ.கம்யூ., கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்

திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

"இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுவதாக என்று இட்டுக்கட்டிக் காட்டப்படுகிறது. மோடியின் தீய செல்வாக்கு தமிழ்நாட்டில் தீண்ட முடியாது என்பதைத் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் நிரூபித்து காட்டியுள்ளன.

திருப்பூர் இ.கம்யூ., எம்.பி சுப்பராயன்

நான் போட்டியிட்ட தொகுதியில் ஆறு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் அதிமுகவின் சக்தி வாய்ந்த அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோரின் வரம்பற்ற செல்வாக்கு தாக்குதல் நடத்திய நிலையிலும், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., கட்சி சார்பில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்றுள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், அனைத்து முன்னேற்றத்தின் தேவைகளை முன்வைத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்" என்று கூறினார்.

Intro:திருப்பூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி


Body:திருப்பூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் நாடாளுமன்றம் தொகுதியில் போட்டியிட்டு அனைத்து கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் மக்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றுள்ளேன்

இந்தியா முழுவதும் மோடியின் அலை வீசுவதாக என்று இட்டுக்கட்டி காட்டப்படுகிறது மோடியின் உடைய தீய செல்வாக்கு தமிழ்நாட்டில் தீண்ட முடியாது என்பதை தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் வளர்ந்து விளைந்து நிற்கிற இந்தத் தமிழ் மண்ணில் தடுத்து நிறுத்த பட்டதை நாம் அனைவரும் அறிவோம்

நான் போட்டியிட்ட திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதில் அதிமுகவின் சக்தி வாய்ந்த அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் மற்றும் கேசி கருப்பண்ணன் அவர்களின் வரம்பற்ற செல்வாக்குகள் தாக்குதல் நடத்தின நிலையிலும் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நான் வெற்றி பெற்றுள்ளேன்

கொங்கு மண்டலத்தில் 14 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன தர்மபுரி தொடங்கி நீலகிரி வரையும் இந்த பத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது ஆனால் இந்த முறை முற்றிலும் தகற்க்கப்பட்டது அந்த 10 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணி மீது மகத்தான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்த கூட்டணி செயல்படும் இதற்கு தலைமை ஏற்று இருக்கிற திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் அனைத்து முன்னேற்றத்தின் தேவைகளை முன்வைத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.