ETV Bharat / city

நெல்லை: மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில் மாணவர் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 30, 2022, 9:59 AM IST

Updated : Apr 30, 2022, 10:18 AM IST

திருநெல்வேலி அருகே பாப்பாகுடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே இன்று(ஏப். 30) சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற தாக்குதலில் மாணவர் உயிரிழப்பு!
மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற தாக்குதலில் மாணவர் உயிரிழப்பு!

திருநெல்வேலி: அம்பை அருகே பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளக்கால் புதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைக்கால் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் பாப்பாக்குடியை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக கையில் கயிறு கட்டி இருப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிகிறது. மேலும் பெல்ட்டால் அடித்து மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாணவர் உயிரிழப்பு: அப்போது, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், தனது வகுப்பு நண்பர்களுடன் இணைந்து தாக்கியதில், 12ஆம் வகுப்பு மாணவர் செல்வ சூர்யாவுக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் செல்வ சூர்யா இன்று(ஏப். 30) அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'தஞ்சாவூரை தொடர்ந்து நாகையிலும்... சப்பர சக்கரத்தில் சிக்கி தொழிலாளர் உயிரிழப்பு'

Last Updated :Apr 30, 2022, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.