ETV Bharat / city

Fisherman rajkiran case: மீனவர் ராஜ்கிரண் சுட்டுக்கொல்லப்பட்டாரா? தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Nov 15, 2021, 10:19 PM IST

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் இடித்ததால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் (rajkiran) மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

rajkiran
rajkiran

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பிருந்தா (R Brunda) என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண் (rajkiran), சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும் படகில் நடுகடலில் அக்டோபர் 19ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து, இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. இந்த உடலை, ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உட்பட உறவினர்களிடம் பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில் காயங்கள் இருந்தன.
எனவே, இது குறித்து தமிழ்நாடு காவலர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரன், உடலை மறுஉடற்கூராய்வு பரிசோதனை செய்து எவ்வாறு இறந்தார் என கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரி தரப்பில் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்." எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று (நவ.15) ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளாரா? எனக் கேள்வி எழுப்பி இது குறித்து கோட்டைப்பட்டினம் தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க : சுட்டுக்கொல்லப்பட்டாரா ராஜ்கிரண்? - உடலை மறு உடற்கூராய்வு செய்யக் கோரி மனைவி மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.