ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு எப்படி நடக்கிறது - உயர் நீதிமன்றக்கிளை கேள்வி

author img

By

Published : Sep 15, 2022, 10:26 PM IST

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு, கேரள எல்லைப்பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர், கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாயத்தேவையைப் பூர்த்தி செய்கிறது.

அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தொண்டி மணல்கள் திருடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டு, ஆற்றுக்கு செல்வதற்குப் பாதைகள் அமைத்து ஆற்று மணலைத் திருடி வருகின்றனர். சட்டவிரோதமாக ஆற்று மணலைத் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் திருட்டைத் தடுப்பதற்குப் பல்வேறு உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பித்து இருந்தும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது எனக் கூறி, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: புதிய தலைமைச்செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர் - தெலங்கானா அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.