ETV Bharat / city

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி...போலீஸ் விசாரணை

author img

By

Published : Sep 15, 2022, 9:59 AM IST

கோயம்புத்தூர் அருகே உள்ள ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற போது சைரன் ஒலித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஆசிரியர் காலனியில் கனரா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் கனரா வங்கி ஏடிஎம்மிற்கு மர்ம நபர்கள் இருவர் வந்துள்ளனர்.

ஒருவர் வெளியே நின்றுகொள்ள மற்றொருவர் ஏடிஎம்மின் உள்ளே நுழைந்து இயந்திரத்தை உடைக்க முற்பட்டுள்ளார். உடனே வங்கியின் சைரன் ஒலித்துள்ளது. இதனால் அச்சமடைந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார் விரைந்து வந்து கனரா வங்கியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற போது திடீரென சைரன் ஒலித்ததால் மெஷினில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

இதையும் படிங்க: பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு - அடுத்த கட்ட நகர்வு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.