ETV Bharat / city

தமிழ்நாடு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்- வரவேற்றார் முதலமைச்சர்

author img

By

Published : Aug 2, 2021, 1:38 PM IST

Updated : Aug 2, 2021, 3:19 PM IST

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். அதன்படி, இன்று (ஆக. 2) காலை தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தார்.

அவரை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். அதையடுத்து அவர் ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

அங்கு சிறிது நேரம் ஓய்விற்குப் பிறகு, மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். பேரவை அரங்கில் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க: பேரவையில் கருணாநிதியின் உருவப்படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைப்பு

Last Updated :Aug 2, 2021, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.