ETV Bharat / city

விசாரணை வளையத்தில் எஸ்.வி.சேகர் - கைது செய்யப்படுவாரா?

author img

By

Published : Aug 28, 2020, 12:46 PM IST

சென்னை: தேசியக்கொடியை அவமதித்தது உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று (ஆகஸ்ட் 28) இரண்டாவது முறையாக மத்திய குற்றப்பிரிவின் முன் ஆஜராகியுள்ள நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

actor
actor

தேசியக்கொடியை அவமதித்தது, தமிழ்நாடு முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இப்புகார் தொடர்பாக ஏற்கெனவே கடந்த 24ஆம் தேதியன்று, சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜரான எஸ்.வி.சேகரிடம், சென்னை மாநகர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நான்கு மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன்பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்றும் நடிகர் எஸ்.வி.சேகர் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகியுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேசியக்கொடியை அவமதித்தது உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், விசாரணையின் முடிவில் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே இவ்வழக்குத் தொடர்பாக முன்பிணைகோரி, உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு: 3 பேர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.